சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
Published on

சென்னை,

சென்னை கோடம்பாக்கம், தி. நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சோதனையின் முடிவிலே முழு விவரம் தெரியவரும். சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com