அன்புமணியை மந்திரியாக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி


அன்புமணியை மந்திரியாக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
x

கோப்புப்படம் 

அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம்

பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலில் சில தவறுகளை செய்துள்ளேன். அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய மந்திரியாக்கியது. இரண்டாவது தவறு அன்புமணிக்கு கட்சித் தலைவர் பொறுப்பு தந்தது. நடக்கும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். என்னை ஐயா என்று அழைத்த சிலர், அங்கு சென்று என்னைப் பற்றி திட்டிப் பேசுகிறார்கள். எம்எல்ஏக்களில் 2 பேர் என்னோடு இருக்கிறார்கள் 3 பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய் விட்டார்கள்.

அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை. அருவருக்கத்தக்க வகையில் அவரது செயல்பாடு உள்ளது. அமைதியாக பாமகவை நடத்திக் கொண்டிருக்கிறபோது அதில் ஒரு பிளவு ஏற்பட்டதாக மக்கள் பேசுகிறார்கள். பாமகவில் பிளவு இருக்கிறது என மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அன்புமணி செயல்படுகிறார். இதுவரை என் தலைமையில் நடந்த போராட்டங்களில் வன்முறையோ, மோதலோ ஏற்பட்டதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story