பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Published on

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (வயது 29) மற்றும் அவரது தாயார் சுப்புத்தாய்(54), ரமேஷின் தந்தை முருகன்(60), ரமேஷின் சகோதரர் மாரிமுத்து(26) ஆகியோரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வஷீத்குமார் இன்று (4.12.2025) குற்றவாளி ரமேஷ் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் சுப்புத்தாய், முருகன், மாரிமுத்து ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பூங்குமார், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com