பராமரிப்பு பணி: சென்னையில் 28ம்தேதி மின்தடை


பராமரிப்பு பணி: சென்னையில் 28ம்தேதி மின்தடை
x

சென்னையில் வருகிற 28ம்தேதி திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

சென்னை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் வருகிற 28.7.2025, திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கிருஷ்ணமா சாலை, பிரகதாம்பாள் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வாலஸ் கார்டன், ரட்லேண்ட் கேட் 1 முதல் 4வது தெரு, கதீட்ரல் கார்டன் சாலை, திருவீதியான் தெரு, மாடல் பள்ளி சாலை, அஜீஸ் முல்க் 1வது, 5வது தெரு, அண்ணா சாலை, கிரீம்ஸ் சாலை, முருகேசன் நாயக்கர் வளாகம், ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை, ரட்லேண்ட் கேட், ஷாஃபி முகமது சாலை, ஜெய்ப்பூர்நகர், லாயிட்ஸ் சாலை, கணேஷ் தெரு, வெஸ்ட் எண்ட் தெரு, கோபாலபுரம், வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, ஜி.கே.புரம், திருமூர்த்திநகர் பிரதான சாலை மற்றும் 1 முதல் 6வது தெரு, சுந்தரம் அவென்யூ, ஜி.ஏ.கான் தெரு ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story