புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் மேயர் பிரியா


புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் மேயர் பிரியா
x

இந்த கட்டிடம் ரூ. 54.50 லட்சம் மதிப்பீட்டில் 1,078 சதுரடி பரப்பளவில் 195ஆவது வார்டு அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, சோழிங்கநல்லூர் மண்டலத்தில், வார்டு-195, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள வார்டு அலுவலக வளாகத்தில், மேயரின் மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (27.12.2025) திறந்து வைத்தார்.

இந்த பல்நோக்கு மையக் கட்டடமானது மேயரின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 54.50 லட்சம் மதிப்பீட்டில் 1,078 சதுரடி பரப்பளவில் 195ஆவது வார்டு அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர் வி.இ.மதியழகன், மாமன்ற உறுப்பினர் க.ஏகாம்பரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story