சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 27). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் சமூக வலைதளம் மூலம் பழகி உள்ளார். இந்த பழக்கத்தின் காரணமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
பின்னர் அதை சிறுமியிடம் காட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





