மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலியில் வள்ளியூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட திசையன்விளை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி
வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில், வள்ளியூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட திசையன்விளை துணைமின் நிலையத்தில் நாளை (10.7.2025, வியாழக்கிழமை) மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே திசையன்விளை, மகாதேவன் குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான் மொழி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






