சென்னையில் வீடு புகுந்து நகை திருட்டு: தாய்-மகள் கைது

தாய்-மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பியூலா. இந்த வீட்டின் கீழ்தளத்தில் ரேவதி(வயது 38) என்ற பெண் தனது கணவர் மற்றும் 15 வயது மகளுடன் வசித்து வருகிறார். பியூலா வீட்டின் பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருடு போனது. இதுபற்றி அம்பத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் கீழ் வீட்டில் வசிக்கும் ரேவதி, தனது மகள் மூலம் பியூலா வீடு புகுந்து நகையை திருடியது தெரியவந்தது.
தாய்-மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடியதாக குன்றத்தூரைச் சேர்ந்த விவின் கேபா(20) என்பவரை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






