ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம்; தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம்; தமிழக அரசு தலையிட்டு  தீர்வு காண வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 13 Nov 2025 12:26 PM IST (Updated: 13 Nov 2025 12:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்​துகள் உரிய அனு​ம​தி, பாது​காப்புச் சான்​றிதழ் இல்​லாதவை​யாக இருப்​ப​தாகக் ​கூறி, அம்​மாநில போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் 60 பேருந்​துகளுக்கு அபராதம் விதித்​தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்​மிட்’ விதி​களின்படி சாலை வரி விதிக்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் சங்​கம் கர்​நாட​கா, கேரளா உள்​ளிட்ட மாநிலங்​களுக்கு பேருந்​துகள் இயக்​கப்​ப​டாது என அறி​வித்​தது.

இந்​நிலை​யில் நேற்று முன்தினம் தமிழகத்​தில் இருந்து கர்​நாட​கா​வில் உள்ள பெங்​களூரு, மைசூரு உள்​ளிட்ட இடங்​களுக்குச் செல்ல வேண்​டிய ஆம்னி பேருந்​துகள் தமிழக எல்​லை​யில் நிறுத்​தப்​பட்​டன. தூக்க கலக்​கத்​தில் இருந்த பயணி​களை வேறு வாக​னங்​களில் கர்​நாடகா​வுக்குச் செல்​லுமாறு இறக்கிவிட்​டனர்.இதனால் ஆயிரக்​கணக்​கான பயணி​கள் காலை​யிலேயே சுமார் 1 கி.மீ. தூரம் சுமை​களோடு நடந்து சென்​று, பெங்​களூரு பேருந்​துகளில் ஏறி சென்​றனர். இந்த சந்​தர்ப்​பத்தை பயன்படுத்தி சில ஆட்​டோ, வாடகை கார் ஓட்​டுநர்​கள் கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தால் பயணி​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில்,ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,

தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story