நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு: அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம்

சென்னையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.
சென்னை
சென்னையில் இருந்து இன்று காலை 5.40 மணிக்கு உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விமானி விமானத்தை சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கினார்.
காலை 6.30 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காலை 7.20 மணிக்கு விமானம் மீண்டும் லக்னோ புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story






