இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி: முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்


இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி: முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 10 May 2025 6:23 AM IST (Updated: 10 May 2025 11:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள் பேரணியில் திரளாக பங்கேற்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) பேரணி நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை 10-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும்.

தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும். இந்த பேரணி இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள் இந்த பேரணியில் திரளாக பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story