சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கோப்புப்படம்
சென்னையில் நேற்றும், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னை,
டிட்வா புயல் காரணமாக நேற்று முன்தினம் (1-ந்தேதி) முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்றும், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாநகர காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் சென்னை, திருவள்ளூரில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையை முன்னிட்டு சென்னை, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (04.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






