அதிமுக ஆட்சியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டம் அமலுக்கு வந்தது - அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநில கல்விக் கொள்கை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டம் அமலுக்கு வந்தது - அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

சென்னை,

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மாணவர்களின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி பள்ளிகளை மேம்படுத்த வெற்றிப் பள்ளிகள் திட்டம் விரைவில் தொடங்கப்படும். மாநில கல்விக் கொள்கை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது.மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என்பதற்காக 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 8ம் வகுப்பு வரை ஆல்-பாஸ் திட்டம் தொடரும்.மாநில பாடத்திட்டத்தில் இனி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். அதிமுக ஆட்சிக்காலத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டம் அமலுக்கு வந்தது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com