திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

திருநெல்வேலியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி, இடைக்கால் வடக்குதெருவை சேர்ந்த பெத்துராஜ் மகன் மகாராஜன் (வயது 30) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவேல் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மகாராஜன் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மகாராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story