கயத்தாறில் மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் வசித்து வரும் திருமணமாகாத நபர் ஒருவர் ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
கயத்தாறில் மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு
Published on

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தேவர் நகரில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 40), திருமணமாகாதவர். இவர் ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கயத்தாறு இரட்டைகுளம் அருகே உறவினர் தாமஸ் என்பவருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். சிறிது நேரத்தில் தாமஸ் அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.

இரட்டைகுளம் அருகே மதுகுடித்த இடத்தில் அமர்ந்திருந்த அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை தேடிச் சென்றனர். அப்போது அவர் சாலையில் தலைகுப்புற கிடந்தார். உறவினர்கள் அவரை தூக்கி பார்த்து போது இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்த அவர் நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற விழுந்ததில் இறந்து போனதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com