மேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு


மேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 Oct 2024 1:32 PM IST (Updated: 4 Oct 2024 2:11 PM IST)
t-max-icont-min-icon

துல்கர் முகாமில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பைசல் சலாமா தெரிவித்துள்ளார்.

ரமல்லா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காசாவின் வட மேற்குக்கரையில் உள்ள துல்கர் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துல்கர் முகாமில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாலஸ்தீன பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் பைசல் சலாமா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story