சீனா, லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்


சீனா, லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
x
தினத்தந்தி 17 Nov 2025 6:38 AM IST (Updated: 17 Nov 2025 6:48 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.

ஜின்ஜியாங்,

சீனாவின் ஜின்ஜியாங் நகரில் இன்று அதிகாலை 1.26 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரில் இருந்து வடக்கு வடகிழக்கே 166 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.15 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரில் இருந்து வடக்கு வடகிழக்கே 244 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

நிலநடுக்கம் அதிக ஆழத்தில் ஏற்படும்போது, பூமியின் மேற்பரப்புக்கு வருவதற்குள் ஆற்றலை அது இழந்து விடும். ஆனால், இதுபோன்று பூமியின் மேற்பரப்பு பகுதியில் ஏற்படும் நிலநடுக்கம் அதிக ஆற்றலுடன் நிலப்பகுதிகளை தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது. இதனால், கட்டிடங்களுக்கும் மக்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

1 More update

Next Story