பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.37 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
180 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.57 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 62.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக பாகிஸ்தானில் நேற்று மாலை ரிக்டரில் 4.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






