ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Oct 2025 3:30 AM IST (Updated: 19 Oct 2025 3:31 AM IST)
t-max-icont-min-icon

மே 7-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இஸ்லாமாபாத்,

இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து மே 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பின்னர் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதனால் மே 10-ந்தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் கைபர் பக்துங்வா மாகாணம் அபோட்டாபாத் நகரில் ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்தியாவுடனான மோதல் குறித்து அவர் கூறுகையில், அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை. அதேசமயம் தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

1 More update

Next Story