ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உக்ரைன் டிரோன் தாக்குதல் - 24 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ்,
உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஒரு ஓட்டலில் உக்ரைன் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 24 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கிராமமான கோர்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் 3 டிரோன்கள் தாக்கியதாகவும், இது பொதுமக்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும் ரஷியாவால் நியமிக்கப்பட்ட கவர்னர் சால்டோ குற்றம் சாட்டியுள்ளார்.






