'குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.விற்கு சென்றால் புனிதராகிவிடலாம்' - ப.சிதம்பரம்


குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.விற்கு சென்றால் புனிதராகிவிடலாம் - ப.சிதம்பரம்
x

பா.ஜ.க.வில் இருக்கும் எல்லோரும் புனிதர்களா? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"பா.ஜ.க.வில் இருக்கும் எல்லோரும் புனிதர்களா? எதிர்கட்சியினர் அனைவரும் குற்றவாளிகளா? குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சாட்சிகளை விசாரித்து நீதிபதி தீர்ப்பளித்த பிறகுதான் ஒருவர் குற்றவாளியாவார்.

பா.ஜ.க.வில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாரும் இல்லையா? எதிர்கட்சியில் குற்றம்சாட்டப்பட்டவர் ஒருவர் பா.ஜ.க.விற்கு சென்றுவிட்டால், மிகப்பெரிய வாஷிங்மெஷினில் அவரைப் போட்டு மோடி சோப்பு மூலம் அவரை புனிதராக்கி விடுவார்கள்."

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.




Next Story