முதல் நபராக வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்குமார்


முதல் நபராக வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்குமார்
x
தினத்தந்தி 19 April 2024 1:38 AM GMT (Updated: 19 April 2024 12:09 PM GMT)

நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை முதல் நபராக செலுத்தியுள்ளார்

சென்னை,

அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். தனது வாக்கினை முதல் நபராக செலுத்தியுள்ளார். நடிகர் அஜித்குமார் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story