அ.ம.மு.க.வுக்கு 'குக்கர்' சின்னத்தை ஒதுக்கீடு செய்தது இந்திய தேர்தல் ஆணையம்


அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது இந்திய தேர்தல் ஆணையம்
x

டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.விற்கு ‘குக்கர்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) போட்டியிட உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், "நான் ஒரு தொகுதி கூட போதும் என்றேன். பா.ஜ.க. தரப்பில் 2 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதன்படி தற்போது 2 தொகுதிகள் கிடைத்துள்ளன.

'குக்கர்' சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எந்தெந்த தொகுதிகளில் அ.ம.மு.க. போட்டியிடும் என்பதை பா.ஜ.க. அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.விற்கு 'குக்கர்' சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் 2 தொகுதிகளில் அ.ம.மு.க. 'குக்கர்' சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் அ.ம.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story