காந்தி, சுபாஷ், படேல் ஒன்று சேர்ந்த தலைவர் பிரதமர் மோடி: ஏ.சி.சண்முகம் புகழாரம்


காந்தி, சுபாஷ், படேல் ஒன்று சேர்ந்த தலைவர் பிரதமர் மோடி: ஏ.சி.சண்முகம் புகழாரம்
x
தினத்தந்தி 10 April 2024 6:39 AM GMT (Updated: 10 April 2024 9:08 AM GMT)

உலக நாடுகளின் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார் என்று வேலூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

வேலூர்,

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி வேலூர் வந்தார். வேலூர் கோட்டை மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை பா.ஜ.க. தொண்டர்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர். பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார். பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கவுரவித்தார்.

பிரதமர் மோடியை வரவேற்று வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது:-

வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் நரேந்திர மோடிதான். காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் படேல் ஆகியோர் ஒன்று சேர்ந்த தலைவர்தான் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஒரு தேசப்பிதா, ஜகத்குரு, உலக நாயகன். உலக நாடுகளின் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார். இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய போர் தளவாடங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story