தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்
x
தினத்தந்தி 19 April 2024 7:01 AM GMT (Updated: 19 April 2024 7:27 AM GMT)

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.

சென்னை,

அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழக தலைவரான பின் விஜய் செலுத்தும் முதல் வாக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story