5-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு


5-வது டெஸ்ட்:  இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:ICC

தினத்தந்தி 31 July 2025 3:11 PM IST (Updated: 31 July 2025 3:21 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ஓவலில் இன்று தொடங்குகிறது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story