ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி: ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த பிராட் - கில்லுக்கு இடமில்லை


ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி: ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த பிராட் - கில்லுக்கு இடமில்லை
x

Image Courtesy: @ICC

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

லண்டன்,

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இதில் முதல் மற்றும் 3வது டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில் 4வது டெஸ்ட் டிரா ஆனது.

இதையடுத்து நடந்த 5வது டெஸ்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரையும் சமன்செய்து அசத்தியது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இரு அணிகளின் ஒருகிணைந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல், ரகுலை தேர்வு செய்துள்ளார். அதன்பின் மூன்றாம் வரிசையில் இங்கிலாந்தின் ஆலி போப்பையும், நான்காம் இடத்தில் ஜோ ரூட்டையும், ஐந்தாம் இடத்தில் ஹாரி புரூக்கையும் தேர்வு செய்துள்ளார். மேலும் அணியின் விக்கெட் கீப்பராக இந்தியாவின் ரிஷப் பந்திற்கு வாய்ப்பளித்துள்ளார்.

இதுதவிர்த்து அணியின் ஆல்ரவுண்டர்களாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கிய பிராட், அணியின் பந்துவீச்சாளர்களாக இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், இந்திய அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரைச் சேர்த்துள்ளார்.

இருப்பினும் அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, பென் டக்கெட் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிராட் தேர்வு செய்த அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ஜோப்ரா ஆர்ச்சர், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.

1 More update

Next Story