இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்


இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்
x

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. துபாயில் இன்று காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் துபாயில் மழை பெய்து வருகிறது. இதனால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story