மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
கொழும்பு,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வரும் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, பிரதிகா களமிறங்கியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா 4 ஓவர்கள் முடிவில் 29 ரன்கள் சேர்த்துள்ளது. மந்தனா 9 ரன்னிலும், பிரதிகா 19 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story






