காயத்துடன் போராடி அரைசதம் அடித்த பண்ட்.. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களில் ஆல் அவுட்


காயத்துடன் போராடி அரைசதம் அடித்த பண்ட்.. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களில் ஆல் அவுட்
x
தினத்தந்தி 24 July 2025 6:59 PM IST (Updated: 24 July 2025 7:11 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். சாய் சுதர்சன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட், காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மேற்கொண்டு பேட்டிங் செய்ய முடியாமல் பாதியில் வெளியேறினார்.

இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே அடித்த ஜடேஜா 20 ரன்களில் அவுட்டானார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். வாஷிங்டன் சுந்தர் நிதானமாக விளையாட மறுமுனையில் ஷர்துல் தாகூர் 41 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். இதனால் 314 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

இதனையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக காலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்குள் வந்தார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட், இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அன்ஷுல் கம்போஜ் 3 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். அடுத்து பும்ரா களமிறங்கினார்.

காயத்துடன் போராடி பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பும்ராவுடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். இவர்களில் பும்ரா 4 ரன்களில் கடைசி விக்கெட்டாக அவுட்டானார்.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. சிராஜ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.

1 More update

Next Story