மகளிர் உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: @ICC
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடர்பில் இன்று நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதுகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கிறது. மகளிர் உலகக்கோப்பை தொடர் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து 3வது இடத்திலும் இலங்கை7வது இடத்திலும் உள்ளன.
இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






