இளையோர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

கோப்புப்படம்
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது.
பிரிஸ்பேன்,
இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 300 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிக்யான் குண்டு 71 ரன், வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா தலா 70 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் வில் பைரம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 301 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 249 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 51 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது.






