ஜெயிலர் படம் பார்ப்பதற்காக சென்னைக்கு வந்த ஜப்பான் ரசிகர்கள்


ஜெயிலர் படம் பார்ப்பதற்காக சென்னைக்கு வந்த ஜப்பான் ரசிகர்கள்
x

ரஜினி படத்தை பார்ப்பதற்காகவே தனது மனைவியுடன் சென்னை வந்ததாக யாசூடா ஹிதோஷி தெரிவித்தார்.

சென்னை,

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு வரும் ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படம் பார்க்க திரையரங்குகளுக்கு வருகின்றனர்.

அந்த வகையில் 'ஜெயிலர்' படம் பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டின் ஒசாகா பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரான யாசூடா ஹிதோஷி, தனது மனையுடன் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் 'ஜெயிலர்' படத்தை மற்ற ரசிகர்களுடன் இணைந்து ஆரவாரத்துடன் கண்டுகளித்தார்.

படம் முடிந்து வெளியில் வந்த யாசூடா ஹிதோஷி, ரஜினி படத்தை பார்ப்பதற்காகவே தனது மனைவியுடன் சென்னை வந்ததாகவும், முத்து படத்தில் இருந்தே தான் ரஜினி ரசிகராக ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்தின் பல்வேறு திரைப்பட வசனங்களை அவர் தமிழில் பேசிக்காட்டியது அங்கிருந்த மற்ற ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story