சர்ச்சையில் சிக்கியதால் டுவிட்டரில் இருந்து விலகிய ராஷிகன்னா


சர்ச்சையில் சிக்கியதால் டுவிட்டரில் இருந்து விலகிய ராஷிகன்னா
x

நடிகை ராஷிகன்னா சர்ச்சையில் சிக்கியதால் டுவிட்டரில் இருந்து விலகினார்.

தமிழில் இமைக்கா நொடிகள். அடங்க மறு, சங்கத் தமிழன், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ராஷிகன்னா நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. இதில் தனுசுடன் நடித்துள்ளார்.

கார்த்தியின் சர்தார் படத்திலும் நடித்து இருக்கிறார். தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ராஷிகன்னா, தன்னை தென்னிந்திய நடிகை என்று அழைக்க கூடாது என்று தெரிவித்ததாக சர்ச்சைகள் எழுந்தன.

தென்னிந்திய திரையுலகை ராஷிகன்னா அவமதித்து விட்டதாக எதிர்ப்புகளில் சிக்கினார். அவரை பலரும் வலைத்தளத்தில் விமர்சித்தனர். இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து விலகி விட்டதாக ராஷிகன்னா தெரிவித்து உள்ளார்.

ஆனாலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து இருப்பேன் என்று கூறியுள்ளார். தென்னிந்திய ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்ததால் டுவிட்டரை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.


Next Story