மராட்டியத்தில் 10 ஆண்டுகளாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 2 பேர் கைது - போலி ஆதார் அட்டை பறிமுதல்


மராட்டியத்தில் 10 ஆண்டுகளாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 2 பேர் கைது - போலி ஆதார் அட்டை பறிமுதல்
x

மராட்டியத்தில் 10 ஆண்டுகளாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்ட்டையும் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.

இவ்வாறு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வசித்துவரும் நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் பஹல்கர் மாவட்டத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, வீரர் நகர் சந்தன்சர் சாலைப்பகுதியில் தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். சகோதரர்களான ஷோகிப் முடலிபி ஷகிப் (வயது 44), ரஹிம் முடலிபி ஷகிப் (வயது 34) ஆகிய 2 வங்காளதேசத்தினரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்துள்ளனர். இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இவருடமிருந்தும் போலி ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story