காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு - ஆயுதக்குவியல் பறிமுதல்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதக்குவியல் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீநகர்,
வடக்கு காஷ்மீர் மாவட்டம் பந்திபோராவில் உள்ள எல்லை நகரமான குரேஸ் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடம் இருப்பதாக உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதி காவல்துறை மற்றும் ராணுவ கூட்டுக்குழு குரேஸ் அருகே உள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பெரும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் 16 கையெறி குண்டுகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் உட்படஒரு பெரிய ஆயுதக் குவியலை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
Related Tags :
Next Story