ஜம்மு காஷ்மீர்: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி.!


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 30 Nov 2021 10:23 AM GMT (Updated: 30 Nov 2021 10:23 AM GMT)

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது நீதிபதி தங்கியிருந்த நீதிமன்ற அறை சீல் வைக்கப்பட்டது.

மேலும் அங்கு பணியின் இருந்த ஊழியர்கள் 15 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் தொற்று பரவியுள்ளதா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று புதிதாக 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 122 பேர் காஷ்மீரிலும், 28 பேர் ஜம்முவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story