மும்பை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது


மும்பை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
x

மிக்சர் கிரைண்டரில் சுமார் 2 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மும்பை,

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது 2 நபர்கள் அவர்களது உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அவர்கள் கொண்டு வந்திருந்த மிக்சர் கிரைண்டரில் சுமார் 2 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மொத்தமாக அவர்களிடம் இருந்து ரூ.2.59 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே, கடத்தல் தங்கத்தை அவர்களிடம் இருந்து பெறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த மேலும் 2 நபர்களையும் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story