மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு


மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2023 5:16 AM GMT (Updated: 6 Nov 2023 6:23 AM GMT)

சிவராஜ்சிங் சவுகானே முதல்-மந்திரியாக வர வேண்டும் என பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

போபால்,

இந்தியாவின் 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா களைகட்டி இருக்கிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகும் அரசை தேர்வு செய்வதற்கான போட்டிக்களம் அனல் பறந்து வருகிறது. 5 மாநிலங்களுக்கும் இந்த மாதத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மத்தியபிரதேச சட்டசபை தேர்தல், வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

இந்தநிலையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மேலும் சிவராஜ்சிங் சவுகானே முதல்-மந்திரியாக வர வேண்டும் என பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். என்டிடிவி, சிஎஸ்டிஎஸ் லோக்நிதி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story