பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்


பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
x

பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என்று தெரிவித்தனர்.பள்ளிகள்,

சிசிடிவி,

சுப்ரீம் கோர்ட்

மேலும் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று அறிவுறுத்தினர். இந்த மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Next Story