சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி பலி... அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்


சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி பலி... அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 20 Nov 2023 2:24 PM GMT (Updated: 21 Nov 2023 6:37 AM GMT)

கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

கலபுராகி,

கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தின் அப்சல்பூர் தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில் 7 வயது சிறுமியான மஹாந்தம்மா ஷிவப்பா தலவார் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16-ந்தேதி பள்ளியில் உள்ள சமையலறையில் மதிய உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, மாணவி சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.

40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி, உடனடியாக சவுதாபூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவிக்கு, முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கலபுராகியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மாணவியின் உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ பிரிவின் கீழ் (அலட்சியத்தால் மரணம்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஊழியர்கள் இருவர் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் தலைமைச் சமையல்காரர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.


Next Story