சீன எல்லைபிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பு - சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் வெளிநடப்பு


சீன எல்லைபிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பு - சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் வெளிநடப்பு
x

அருணாச்சலபிரதேச எல்லையில் கடந்த 9-ம் தேதி இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டன.

புதுடெல்லி,

அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ம் தேதி இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முற்பட்டன.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் சீன படையுடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மோதலின்போது இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன படைகளை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடைந்தனர்.

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயன்ற சம்பவம், இந்திய-சீன படைகளின் மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.

சீனாவுடனான எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


Next Story