டெல்லி விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது


டெல்லி விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
x

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் நடத்திய சோதனையின்போது, பாங்காக்கில் இருந்து வந்திறங்கிய 2 பயணிகள் போதைப்பொருட்களை மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களின் உடைமைகளை சோதனையிட்ட அதிகாரிகள், 5.04 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story