புதிதாக 5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள்: மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அறிவிப்பு


புதிதாக 5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள்: மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அறிவிப்பு
x

கோப்புப்படம்

புதிதாக 5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள் அடுத்தவாரத்தில் தொடங்கப்படுவதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது பெண்கள் தலைமைத்துவத்திற்கான சி.ஐ.ஐ. மையத்தை இரானி தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது, "பெண்கள் வீடு மற்றும் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேலையில் ஈடுபடுவதற்கு பொருளாதார அர்த்தமுள்ள போட்டி வாய்ப்புகளை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். தொழில்துறை தலைமை சட்டமன்ற முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "அடுத்த வாரத்திற்குள் நகர மையங்களில் 5,000 குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கம் தொடங்கும்" என்று கூறி உள்ளார்.


Next Story