'இந்தியா-சீனா எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது' - ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே


இந்தியா-சீனா எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே
x

சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராணுவ தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி மனோஜ் பாண்டே கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"சீனாவை ஒட்டிய எல்லையில் அந்நாடு தனது படைவீரர்களின் எண்ணிக்கையை சற்று அதிகரித்துள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாகவே இருக்கிறது. எனினும், நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது. சீனா உடனான 7 எல்லை பிரச்சினைகளில் 5 பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கிறோம்.

எனினும், எத்தகைய நிலைமையையும் எதிர்கொள்வதற்கு ஏற்ப போதுமான படைகளை நாம் எல்லையில் நிறுத்தி உள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் சீனாவை ஒட்டிய வட எல்லையில் நாம் நமது கட்டமைப்புகளை வலுப்படுத்தி உள்ளோம். வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் தற்போது அமைதி திரும்பி இருக்கிறது."

இவ்வாறு மனோஜ் பாண்டே தெரிவித்தார்.


Next Story