"சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் எப்போது தொடங்கப்படும்?" - மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில்


சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் எப்போது தொடங்கப்படும்? - மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில்
x

சாலை அமைப்பது குறித்த மாநில அரசின் கருத்துக்காக காத்திருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதா? இந்த திட்டத்திற்கான மொத்த செலவு எவ்வளவு? எப்போது பணிகள் தொடங்கி நிறைவு பெறும்? என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, பாரத் மாலா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட உள்ள சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தின் மொத்த மதிப்பு 7 ஆயிரத்து 230 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.

எந்தெந்த பாதையில் சாலை அமைக்கப்படும் என்பது குறித்த மாநில அரசின் கருத்துக்காக காத்திருப்பதாக தெரிவித்த அவர், மாநில அரசின் கருத்துக்கள் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.


Next Story