ம.பி.யில் அடுத்த முதல்-மந்திரி யார்? நாளை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


ம.பி.யில் அடுத்த முதல்-மந்திரி யார்? நாளை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 10 Dec 2023 3:52 AM GMT (Updated: 10 Dec 2023 4:13 AM GMT)

சிவராஜ் சிங் சவுகான் தனது 'எக்ஸ்' தளத்தில், 'ராம்-ராம்' என பதிவிட்டது பரபரப்பான விவாதத்தை கிளப்பிவிட்டது.

போபால்,

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் அங்கு அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முதல்-மந்திரி பதவி தனக்கே வேண்டும் என அடம்பிடித்து நிற்கும் சிவராஜ் சிங் சவுகான், தனது 'எக்ஸ்' தளத்தில், 'ராம்-ராம்' என பதிவிட்டது பா.ஜ.க.வினரிடையே பரபரப்பான விவாதத்தை கிளப்பிவிட்டது.

இன்னொரு பக்கம் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் பட்டேல், கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோர் முதல்-மந்திரி பதவியை கைப்பற்றும் முனைப்பில் படு தீவிரமாக உள்ளனர். இவர்களுடன் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் நாளை திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேச பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.


Next Story