அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது


அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது
x

நடராஜர், சிவன், பார்வதி உள்ளிட்ட 10 சாமி சிலைகளை வெளிநாடுகளில் இருந்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மீட்டுள்ளது.

சென்னை,

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது. நடராஜர், பார்வதி, சிவன் உள்ளிட்ட 10 சாமி சிலைகளை, வெளிநாடுகளில் இருந்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மீட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட இந்த சிலைகள், முதலில் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்படுகின்றன. பின்னர் கோர்ட் மூலமாக அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story