சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1¼ கிலோ தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் கைது


சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1¼ கிலோ தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் கைது
x

சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1¼ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த விமலா ராணி (வயது 30), ஜுவானி (28) உள்பட 3 பெண்களும், தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் என 4 பெண்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். 4 பேரிடம் இருந்து ரூ.61 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 4 பெண்களை கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story