மகளை திருமணம் செய்த ஆத்திரத்தில் வாலிபரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது


மகளை திருமணம் செய்த ஆத்திரத்தில் வாலிபரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது
x

சென்னை வியாசர்பாடியில் மகளை திருமணம் செய்த ஆத்திரத்தில் வாலிபரை வெட்டிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை வியாசர்பாடி 12-வது தெரு சென்ட்ரல் அவென்யூ சாலையைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 58). இவரது மகன் மணிகண்டன் (32), தனது அத்தை அமிர்தத்தின் மகள் ஷாலினியை காதலித்து வந்த நிலையில், அமிர்தம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி ஷாலினியை மணிகண்டன் திருமணம் செய்து கொண்டு வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அமிர்தம் கடந்த 9-ந் தேதி கும்பலுடன் மருதுபாண்டியன் வீட்டிற்கு சென்று மணிகண்டன் மற்றும் அவரது தந்தை மருதுபாண்டியனை வெட்டினார்.

இது தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், வியாசர்பாடி சர்மா நகரரை சேர்ந்த கோபிநாத் (26), சாகுல் ஹமீது (30) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அமிர்தத்தை தேடி வருகின்றனர்.


Next Story